Monday, January 11, 2010

சினிமா திருட்டும் அழுகையும்

இந்த பதிவு தமிழனின் தலையாய பிரச்சினை யாக முதல்வர் கருதும் ஜக்குபாய் பிரச்சினை. இதை முதலில் கவனித்து நடவடிக்கை எடுக்கும் படி சரத்குமாரும், ராதிகாவும் கேட்டவுடன் வாழும் வள்ளுவர் நடவடிக்கை எடுத்ததும் ராதிகாவுக்கு கண்கள் பணித்ததும் எல்லோரும் ஏற்கனவே பார்த்தாயிற்று. இதில் ரஜினியின் பேச்சு சற்று பரவாயில்லை. பிரச்சினை ஆரம்பிக்கும் இடத்திலிருந்து அதை தீர்க்கவேண்டும் என்று அவர் சொன்னது சரிதான் என்றாலும் வழக்கம்போல் பிறர் எதிர்த்து அறிக்கை கொடுப்பதற்கும் தான் பிறகு மன்னிப்பு கேட்பதற்கும் ஏதுவாக அவர் பேச்சு அமைந்து விட்டது. மற்ற எல்லாரின் பேச்சுக்கள் எல்லாமே அந்த கூடத்தில் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று பேசியது போல இருந்தது. இருந்தாலும் இந்த சாதரானின் சந்தேகம் என்ன என்றல் இவர்கள் கருனநிதியைய்ம், எம் ஜி ஆரையும் நினைத்த நேரத்தில் எப்படி பார்க்க முடிகிறது? ஒரு சாதாரண ஆள் ஒரு அரசாங்க அதிகாரியையே பார்க்க தவம் கிடக்கும் போது இது மட்டும் எப்படி முடிகிறது? பத்திரிகைகள் ஓங்கி குரல் கொடுத்தன தினமலரின் பிரச்சினையின் போது. ஆனால் எந்த பத்திரிகைக்கும் சினிமா நியூஸ் இல்லாமல் காலம் தள்ள முடியாது என்பது நன்கு தெரியும் (துக்ளக் ஒரு விதி விலக்கு. எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது நான் ஒரு அத்தாட்சி கைஎளுதிர்காக எங்கள் ஊரின் மருத்துவரை (இவர் அவர் இல்லை) பார்க்க போனபோது அவர் தனது ஒவொரு கைஎளுதிர்க்கும் விலை வைத்திருந்தார். அவரை பார்க்கவும், அவர் எதிர் பார்த்ததை கொடுத்தாலும் நான் அவளவு நேரம் காத்திருக்க வேண்டி இருந்தது. இவர்கள் எந்த தைரியத்தில், எதனால் இவளவு சீக்கிரம் மாநிலத்தின் சக்தி வாய்ந்த அதிகாரியை (டெல்லியின் தலை நகரில் வசிப்பவர்) சந்திக்க முடிகிறது? இதை எல்லாரும் விட்டு விட்டு ரஜினி பேசியது சரியா? கமல் பேசியது சரியா? ராதிகா, சரத்குமார் அழுதது நிசமா? என்று தான் பேசுகிறார்கள். அனைத்து blog களிலும் இதுதான் செய்தி. சினிமாவை விட்டு எப்போதுதான் வெளியே வரப் போகிறோம்?

No comments:

Post a Comment